மேற்குவங்கத்தில் கோயில் மதில் சுவர் விழுந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானா மாவட்டத்தில் கச்சுவாவில் கிருஷ்ணஜெயந்தியை முன்னிட்டு கோயில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அப்போது கச்சுவா பகுதியில் உள்ள கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி நிகழ்ச்சியை காண ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது கோயிலின் ஒரு பக்க சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 6 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து உயிரிழந்த 6 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிதியுதவி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.